கரிகாலன் செய்திகள்கரிகாலன் செய்திகள்
    September 2023
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Jun    
    What's Hot

    மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!

    June 24, 2021

    மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!

    June 24, 2021

    தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!

    June 24, 2021
    Facebook Twitter Instagram
    Facebook Twitter Instagram
    கரிகாலன் செய்திகள் கரிகாலன் செய்திகள்
    Post Your Free Ads
    • முகப்பு
    • செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • இலங்கை செய்திகள்
      • உலகச் செய்திகள்
    • சினிமா
    • ஆரோக்கியம்
    • தொழில் நுட்பம்
    • வினோதம்
    • விளையாட்டு
    • வீடியோ
    கரிகாலன் செய்திகள்கரிகாலன் செய்திகள்
    Home » கட்டார் கால்பந்து திருவிழா… இலங்கை, இந்தியர் உட்பட 6,500 பேர் மரணம் : வெளிவரும் அதிர்ச்சித் தகவல்!!
    வெளிநாட்டு செய்தி

    கட்டார் கால்பந்து திருவிழா… இலங்கை, இந்தியர் உட்பட 6,500 பேர் மரணம் : வெளிவரும் அதிர்ச்சித் தகவல்!!

    EditorBy EditorFebruary 25, 2021No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கட்டார் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உட்பட்ட நாடுகளைச் சேர்ந்த 6,500 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

    கட்டார் நாடு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் உலக கிண்ணம் கால்பந்து திருவிழாவை நடத்தும் உரிமையை வென்றது அன்று முதல் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம் உள்ளிட்ட இந்த ஐந்து தெற்காசிய நாடுகளில் இருந்து சராசரியாக 12 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒவ்வொரு வாரமும் இறந்துள்ளனர்

    இலங்கை, இந்தியா, வங்காளதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் தரவுகள் படி 2011-2020 காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 5,927 பேர் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது

    2010 மற்றும் 2020 க்கு இடையில் பாகிஸ்தான் தொழிலாளர்கள் மேலும் 824 பேர் இறந்ததாக கட்டாரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன

    புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மொத்த இறப்பு எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகமாக இருந்தாலும், பிலிப்பைன்ஸ் மற்றும் கென்யா நாட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை

    மட்டுமின்றி, 2020 இறுதி மாதங்களில் நிகழ்ந்த மரணங்களும் சேர்க்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது எதிர்வரும் 2022-ல் கட்டாரில் உலக கிண்ணம் கால்பந்து திருவிழா முன்னெடுக்கப்படுகிறது

    இதற்காக 7 புதிய பிரமாண்ட விளையாட்டு அரங்கங்கள், விமான நிலையம், சாலைகள், சாலை போக்குவரத்து வசதிகள், ஹொட்டல்கள், அத்துடன் புதிய நகரம் ஒன்றையும் கட்டார் வடிவமைத்துள்ளது

    இதன் பொருட்டு திரளான புலம்பெயர் தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் ஈடுபடுத்தப்பட்டனர் இதில், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 6,500கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்துள்ள நிலையில்,

    37 பேர் மட்டும் கட்டுமானம் தொடர்பாக மரணமடைந்துள்ளதாக கட்டார் அரசு சார்பில் கூறப்படுகிறது தற்போது அம்பலமான இந்த தரவுகள், கட்டார் நிர்வாகம் அதன் 2 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாக்கத் தவறியதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக மனித உரிமைகள் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன

    கட்டார் உலக கிண்ணம் கால்பந்து திருவிழா கட்டுமானம் தொடர்பான பணிகளில் ஈடுபட்ட இந்தியர்கள் 2,711 பேர் இறந்துள்ளனர் நேபாளம் நாட்டவர்கள் 1,641 பேர் இறந்துள்ளனர்

    வங்காளதேசத்து தொழிலாளர்கள் 1,018 பேர்களும், பாகிஸ்தானியர்கள் 824 பேர்களும் இலங்கையர்கள் 557 பேர்களும் கடந்த 10 ஆண்டுகளில் இறந்துள்ளனர் ஆனால் இதுவரை உரிய இழப்பீடு வழங்கப்படாமலும், இழப்பீடு கேட்டு போராடும் பரிதாப நிலையிலேயே உறவினர்களும் உள்ளனர்

    மட்டுமின்றி, தங்கள் அன்புக்குரியவர்களின் மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்தும் குழப்பமே மிஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது

    மேலும், வெளியான தரவுகளின் அடிப்படையில், இந்திய, நேபாளம் மற்றும் வங்காளதேசம் தொழிலாளர்களிடையே 69% இறப்புகள் இயற்கையானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன என தெரிய வந்துள்ளது

    Post Views: 11
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Editor

    Related Posts

    தமிழர்களே அவதானம், பிரான்ஸில் தூங்கிய தந்தையை படுகொலை செய்த மகன்!

    June 8, 2021

    டியூஷன் படித்து வந்த 17 வயது மாணவருடன் மாயமான ஆசிரியை!

    June 5, 2021

    புலம்பெயர் தமிழர்கள் தமிழ் கடைகளில் விற்கப்படும் மீன் வாங்கி சாப்பிட வேண்டாம் என எச்சரிக்கை!

    June 4, 2021

    Comments are closed.

    September 2023
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Jun    
    Recent Posts
    • மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!
    • மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!
    • தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!
    • கொழுப்பை குறைக்கும் பூண்டு…
    • இயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி தெரியுமா..?
    Recent Comments
      Facebook Twitter Instagram
      • முகப்பு
      • அரசியல் களம்
      • அந்தரங்கம்
      • விளையாட்டு
      • சிறப்புக்கட்டுரைகள்
      • தொழில் நுட்பம்
      • இலங்கை செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • உலகச் செய்தி
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • சினிமா
      © 2023 || All Right Reserved || Designed and Developed by WEBbuilders.lk

      Type above and press Enter to search. Press Esc to cancel.