கரிகாலன் செய்திகள்கரிகாலன் செய்திகள்
    October 2023
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Jun    
    What's Hot

    மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!

    June 24, 2021

    மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!

    June 24, 2021

    தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!

    June 24, 2021
    Facebook Twitter Instagram
    Facebook Twitter Instagram
    கரிகாலன் செய்திகள் கரிகாலன் செய்திகள்
    Post Your Free Ads
    • முகப்பு
    • செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • இலங்கை செய்திகள்
      • உலகச் செய்திகள்
    • சினிமா
    • ஆரோக்கியம்
    • தொழில் நுட்பம்
    • வினோதம்
    • விளையாட்டு
    • வீடியோ
    கரிகாலன் செய்திகள்கரிகாலன் செய்திகள்
    Home » நேற்றயதினம் 20 வயது யுவதி உட்பட்ட 8 பேர் கொரனாவால் உயிரிழப்பு!
    இலங்கை செய்தி

    நேற்றயதினம் 20 வயது யுவதி உட்பட்ட 8 பேர் கொரனாவால் உயிரிழப்பு!

    EditorBy EditorFebruary 19, 2021No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    20 வயது யுவதி உள்ளிட்ட மேலும் எட்டுப் பேர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

    இலங்கையில் ஏற்கனவே 422 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ள 08 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 430 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

    இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவர் நேற்றும் (18), மூவர் நேற்று முன்தினமும் (17), கடந்த செவ்வாய்க் கிழமை (16) இருவரும், கடந்த ஜனவரி 20, 22 ஆகிய தினங்களில் தலா ஒருவரும் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தெகட்டன பிரதேசத்தைச் சேர்ந்த, 52 வயதான ஆண் ஒருவர், தொம்பே மாவட்ட வைத்தியசாலையில் இருந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (18) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, உக்கிர நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்த்துமா நோய் நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொழும்பு 08 (பொரளை) பிரதேசத்தைச் சேர்ந்த, 58 வயதான ஆண் ஒருவர், அநுராதபுரம் மெத்சிறி செவண சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் 17 நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட இருதய நோய், உக்கிர சிறுநீரக சிதைவடைவு மற்றும் உயர் இரத்த அழுத்தம், என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரிதீமாலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த, 20 வயதான பெண் ஒருவர், கஹகொல்ல சிகிச்சை நிலையத்திலிருந்து மஹியங்கணை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணமும் நேற்று முன்தினம் (17) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், உக்கிர கொவிட்-19 நியூமோனியாவுடன் சுவாசத் தொகுதி செயலிழப்பு, என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொழும்பு 10 (மருதானை/ மாளிகாவத்தை) பிரதேசத்தைச் சேர்ந்த, 86 வயதான ஆண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணமும் நேற்று முன்தினம் (17) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, நுரையீரல் தொற்று மற்றும் ஆஸ்த்துமா நோய் நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 67 வயதான பெண் ஒருவர் தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த செவ்வாய்க் கிழமை (16) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் உக்கிர நீரிழிவு நோய், என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மீகொட பிரதேசத்தைச் சேர்ந்த, 43 வயதான ஆண் ஒருவர், வெலிசறை காச நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணமும் கடந்த செவ்வாய்க் கிழமை (16) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், மூச்சுக் குழாய் அழற்சி (Bronchitis) நிலை காரணமாக சுவாசத் தொகுதியின் செயலிழப்பு மற்றும் கொவிட்-19 நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த, 81 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த ஜனவரி 20ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், இருதயம் மற்றும் சுவாசத் தொகுதி செயலிழப்பு, என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த, 74 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த ஜனவரி 22ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Post Views: 11
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Editor

    Related Posts

    மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!

    June 24, 2021

    மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!

    June 24, 2021

    தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!

    June 24, 2021

    Comments are closed.

    October 2023
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Jun    
    Recent Posts
    • மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!
    • மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!
    • தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!
    • கொழுப்பை குறைக்கும் பூண்டு…
    • இயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி தெரியுமா..?
    Recent Comments
      Facebook Twitter Instagram
      • முகப்பு
      • அரசியல் களம்
      • அந்தரங்கம்
      • விளையாட்டு
      • சிறப்புக்கட்டுரைகள்
      • தொழில் நுட்பம்
      • இலங்கை செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • உலகச் செய்தி
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • சினிமா
      © 2023 || All Right Reserved || Designed and Developed by WEBbuilders.lk

      Type above and press Enter to search. Press Esc to cancel.