கரிகாலன் செய்திகள்கரிகாலன் செய்திகள்
    October 2023
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Jun    
    What's Hot

    மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!

    June 24, 2021

    மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!

    June 24, 2021

    தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!

    June 24, 2021
    Facebook Twitter Instagram
    Facebook Twitter Instagram
    கரிகாலன் செய்திகள் கரிகாலன் செய்திகள்
    Post Your Free Ads
    • முகப்பு
    • செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • இலங்கை செய்திகள்
      • உலகச் செய்திகள்
    • சினிமா
    • ஆரோக்கியம்
    • தொழில் நுட்பம்
    • வினோதம்
    • விளையாட்டு
    • வீடியோ
    கரிகாலன் செய்திகள்கரிகாலன் செய்திகள்
    Home » பெண் மருத்துவரை அடித்து ஆறாவது மாடியிலிருந்து தூக்கி வீசியவர்கள்… ஒரு வித்தியாசமான ஆணவக்கொலை
    சமூக சீர்கேடு

    பெண் மருத்துவரை அடித்து ஆறாவது மாடியிலிருந்து தூக்கி வீசியவர்கள்… ஒரு வித்தியாசமான ஆணவக்கொலை

    EditorBy EditorMarch 24, 2021No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    இன்னமும் பல நாடுகளில் ஆணவக்கொலை என்னும் கொடூரம் அமைதியாக அரங்கேறிக்கொண்டேதான் இருக்கிறது.

    காதலித்ததற்காக மகளைக் கொன்ற தந்தை, தங்கையைக் கொன்ற அண்ணன், தன் முறைப்பெண் வேறொருவரைக் காதலித்ததால் அவரைக் கொன்ற முறைமாப்பிள்ளை என பல உறவினர்களே அரங்கேற்றிய ஆணவக்கொலைகளை கேள்விப்பட்டிருக்கிறோம்.

    தற்போது எகிப்தில் ஒரு வித்தியாசமான ஆணவக்கொலை நடந்துள்ளது. இங்கே பெண் மருத்துவர் ஒருவரைக் கொலை செய்தவர்கள், அவரது உறவினர்களே அல்ல! பெயர் வெளியிடப்படாத 34 வயதான பெண் மருத்துவர் ஒருவர், தன் சக ஆண் ஊழியரை தன் வீட்டுக்கு அழைத்துள்ளார்.

    அவர்கள் இருவரும் வீட்டுக்குள்ளிருக்கும்போது, அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்த அந்த வீட்டின் சொந்தக்காரர், காவலாளி மற்றும் பக்கத்துவீட்டுக்காரர் ஆகியோர் அந்த பெண்ணை அடித்து உதைத்து ஆறாவது மாடியிலிருந்து தூக்கி வீசியுள்ளார்கள்.

    கீழே விழுந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.எகிப்தைப் பொருத்தவரை, உறவினர் அல்லாத ஒருவருடன் தனிமையில் இருப்பது மிகவும் அவமானத்துக்கு உரிய விடயமாக கருதப்படும், நேரடியாக சட்டம் அதை தடை செய்யாத நிலையிலும், அந்நாட்டு மக்கள் அதை சகிக்க இயலாத குற்றமாக கருதுகிறார்கள்.

    சமீபத்தில், திருமணம் முதல் விவாகரத்து வரை ஆண்களுக்கு மட்டுமே உரிமைகளை வழங்கும் சட்டம் ஒன்றை கொண்டுவர எகிப்து அரசியல்வாதிகள் திட்டமிட்டுள்ளதால் கடும் சர்ச்சை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.அப்படிப்பட்ட ஒரு சூழலில், அந்த பெண் மருத்துவரைக் கொன்ற மூன்று பேர் மீதும் இன்னும் குற்றச்சாட்டு கூட பதிவு செய்யப்படவில்லை.

    அவர் மன நல பிரச்சினைகளால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கதை ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள் அவரை கொலை செய்தவர்கள்.அவர்களை தண்டிக்கவேண்டும் என எகிப்தில் பெண் உரிமைகளுக்காக போராடும் சமூக ஆர்வலர்கள் பேரணிகளை நடத்தி வருகிறார்கள்.

    Post Views: 140
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Editor

    Related Posts

    மருத்துவரின் 5 மனைவிகள் மற்றும் பெண் மருத்துவர் ஒருவரின் 6 கணவன்மார்! வெடித்தது சர்ச்சை….!

    June 14, 2021

    தமிழர்களே அவதானம், பிரான்ஸில் தூங்கிய தந்தையை படுகொலை செய்த மகன்!

    June 8, 2021

    டியூஷன் படித்து வந்த 17 வயது மாணவருடன் மாயமான ஆசிரியை!

    June 5, 2021

    Comments are closed.

    October 2023
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Jun    
    Recent Posts
    • மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!
    • மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!
    • தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!
    • கொழுப்பை குறைக்கும் பூண்டு…
    • இயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி தெரியுமா..?
    Recent Comments
      Facebook Twitter Instagram
      • முகப்பு
      • அரசியல் களம்
      • அந்தரங்கம்
      • விளையாட்டு
      • சிறப்புக்கட்டுரைகள்
      • தொழில் நுட்பம்
      • இலங்கை செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • உலகச் செய்தி
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • சினிமா
      © 2023 || All Right Reserved || Designed and Developed by WEBbuilders.lk

      Type above and press Enter to search. Press Esc to cancel.