கரிகாலன் செய்திகள்கரிகாலன் செய்திகள்
    September 2023
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Jun    
    What's Hot

    மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!

    June 24, 2021

    மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!

    June 24, 2021

    தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!

    June 24, 2021
    Facebook Twitter Instagram
    Facebook Twitter Instagram
    கரிகாலன் செய்திகள் கரிகாலன் செய்திகள்
    Post Your Free Ads
    • முகப்பு
    • செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • இலங்கை செய்திகள்
      • உலகச் செய்திகள்
    • சினிமா
    • ஆரோக்கியம்
    • தொழில் நுட்பம்
    • வினோதம்
    • விளையாட்டு
    • வீடியோ
    கரிகாலன் செய்திகள்கரிகாலன் செய்திகள்
    Home » வீட்டு வேலை செய்த இளைஞனை நம்பிய முதலாளியம்மாவுக்கு நேர்ந்த நிலை! வீடு திரும்பிய கணவன் கண்ட அதிர்ச்சி காட்சி.. எச்சரிக்கை செய்தி
    இந்திய செய்தி

    வீட்டு வேலை செய்த இளைஞனை நம்பிய முதலாளியம்மாவுக்கு நேர்ந்த நிலை! வீடு திரும்பிய கணவன் கண்ட அதிர்ச்சி காட்சி.. எச்சரிக்கை செய்தி

    EditorBy EditorMarch 22, 2021No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தமிழகத்தில் சரியாக விசாரிக்காமல் இளைஞனை ஒரு தம்பதி வீட்டு வேலையில் அமர்த்திய நிலையில் அவர் தனது முதலாளியம்மாவைக் கொலை செய்து நகை, பணத்துடன் தப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் ரவி (52). இவர், சௌகார் பேட்டையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் மனைவி கலைவாணி (47). இவர்களின் மகன் உமேஷ் புனேவில் படித்து வருகிறார்.இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் வீட்டிற்கு பெயின்ட் அடிக்க வந்த ராகேஷ் என்பர், தம்பதிகளுடன் நண்பராக பழகியுள்ளார்.பெயிண்டிங் வேலை முடிந்த பின்னர் ராகேஷ், தம்பதியிடம் தான் வேலை தேடி வருவதாக கூறினார்.

    எங்கள் வீட்டுக்கே ஒரு ஆள் தேவை, இங்கேயே இருந்துகொள் என்று ரவி கூறியுள்ளார்.ராகேஷ், விசுவாசமான வீட்டு வேலைக்காரனாக நடந்துகொண்டார். அதற்காக அவரது மனைவி ரேவதி, குழந்தைகளுடன், ராகேஷை தன் குடியிருப்பின் ஒரு பகுதியில் தங்க வைத்தார் முதலாளி அம்மா கலைவாணி.

    ரவி காலையில் தனது பைனான்ஸ் கம்பெனிக்குச் சென்றால் நள்ளிரவில்தான் வீடு திரும்புவது வழக்கம். நேற்று காலை பணிக்குச் சென்றவர், வீடு திரும்ப நேரமாகும் என்பதைச் சொல்ல மனைவிக்கு போன் செய்துள்ளார். ஆனால், போன் போகவில்லை.

    உடனே ராகேஷுக்கு போன் செய்ய அவரும் போனை எடுக்கவில்லை. இதனால் குழப்பமடைந்த ரவி உடனடியாக வீட்டுக்குத் திரும்பியுள்ளார். வீடு வெளியில் பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்து சந்தேகப்பட்டு உள்ளே ஜன்னல் வழியாகப் பார்த்தபோது மனைவி கை, கால் கட்டப்பட்ட நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே போய் பார்த்துள்ளார். அங்கே அவர் மனைவி கலைவாணி பின்னந்தலையில் காயத்துடன் கிடந்தார். அவரை சோதித்தபோது அவர் இறந்து போயிருந்ததை கண்டு அலறி துடித்தார்.

    ஆளில்லாததைப் பயன்படுத்திக் கொண்டு ராகேஷ் கலைவாணியைத் தாக்கி, அவரது கை, கால்களைக் கட்டிப்போட்டு கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 15 சவரன் எடையுள்ள தாலி, வளையல்கள், ரொக்கப் பணம் 10 ஆயிரம் ஆகியவற்றைத் திருடிக்கொண்டு குடும்பத்துடன் தப்பிச் சென்றுள்ளார்.

    இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காவலாளி வேலைக்கு சேர்ந்த ராகேஷ், வீட்டில் உள்ள நகைக்கு ஆசைப்பட்டு, கலைவாணியை கொடூரமாக கொலை செய்துவிட்டு நகைகள், பணத்தை கொள்ளையடித்து விட்டு குடும்பத்துடன் தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொலிசார் கூறுகையில், ஒருவரை வேலைக்கு வைக்கும் முன் அவரைப் பற்றி நன்கு விசாரிக்க வேண்டும். விசாரிக்காமல் வேலைக்கு வைக்கப்படும் நபர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களாக இருந்தால் நமது இரக்கமே இறப்புக்கும் காரணமாக அமைந்துவிடும் என எச்சரித்துள்ளனர்.

    Post Views: 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Editor

    Related Posts

    மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!

    June 24, 2021

    நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.

    June 21, 2021

    மாமியாருக்கு பயந்து கர்ப்பமாக இருப்பதாக பொய் கூறிய மருமகள்! ஸ்கேனில் உண்மை தெரிந்த பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

    June 20, 2021

    Comments are closed.

    September 2023
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Jun    
    Recent Posts
    • மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!
    • மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!
    • தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!
    • கொழுப்பை குறைக்கும் பூண்டு…
    • இயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி தெரியுமா..?
    Recent Comments
      Facebook Twitter Instagram
      • முகப்பு
      • அரசியல் களம்
      • அந்தரங்கம்
      • விளையாட்டு
      • சிறப்புக்கட்டுரைகள்
      • தொழில் நுட்பம்
      • இலங்கை செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • உலகச் செய்தி
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • சினிமா
      © 2023 || All Right Reserved || Designed and Developed by WEBbuilders.lk

      Type above and press Enter to search. Press Esc to cancel.