M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
Author: Editor
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் 2006ம் ஆண்டு திருமணமானது. நிலையில் இத்தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், சென்னையில் பைனான்ஸ் மற்றும் கட்டிடம் கட்டித் தரும் ஒப்பந்தத் தொழிலில் இருவரு, ஈடுபட்டு வந்தனர். இதனிடையே மகனின் பள்ளி ஆசிரியையுடன் கணவருக்கு தொ டர்பிருப்பதாக அறிந்ததை அடுத்து கணவரிடம் இருந்து அப்பெண் விவாகரத்து பெற்றுக்கொண்டு மகனுடன் தனியாக வசிக்கத் தொடங்கினார். எனினும் அப்பெண் தனது கணவருடன் தொழில் ரீதியான தொடர்பில் இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தி ஆந்திர மாநிலம் நெல்லூர் பாளையம் சந்திரபாடியம் என்ற பகுதியில் நடைபெற்ற கட்டிடப் பணி தொடர்பாக, சீனிவாச ரெட்டி என்பவருடன், அந்த பெண்ணின் கணவருக்கு நட்பு ஏற்பட, சீனிவாச ரெட்டி, இத்தம்பதியின் குடும்ப விவரங்களைத் தெரிந்து கொண்டு இருவரையும் சேர்த்து வைப்பதாகக் கூறியதுடன், அந்தப் பெண்ணிடம் நட்பாக பழகத் தொடங்கினார். ஆனால் கணவருடனான் தொடர்பில்…
இலங்கையில் நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஏற்கனவே எதிர்வரும் 7ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் தற்போது 7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படுவதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார். நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து வந்த கணவன் அவரது காதலி வீட்டில் தங்கியிருக்கின்ற நிலையில் குறித்த கணவனை மீட்டுத்தருமாறு மனைவி போராடி வரும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறி வவுனியாவில் கடந்த 2010-ம் ஆண்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணொருவர், வவுனியாவை சேர்ந்த நபரொருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். த்த சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது, குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் கடந்த 2010-ம் ஆண்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணொருவர், வவுனியாவை சேர்ந்த நபரொருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு பெண்குழந்தை பிறந்த நிலையில் குறித்த பெண்ணின் கணவர், அரபு நாடொன்றிற்கு வேலைக்கு சென்றிருந்தார். அந்த காலகட்டிடத்தில் குறித்த நபருக்கும் அவரின் பள்ளிப்பருவ காதலிக்குமிடையில் முகநூல் ஊடாக மீண்டும் காதல் மலர்ந்த நிலையில், அவர் உழைக்கும் பணம் அனைத்தையும் தனது முன்னாள் இந்நாள் காதலிக்கு அனுப்பியுள்ளார். அதன் தொடர்ச்சியாக அண்மையில் வவுனியா வந்த குறித்த நபர் மனைவி வீட்டுக்கு செல்லாமல், அவரின் தாய் வீட்டுக்கும்,…
யாழில். குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய், தந்தை வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியில் வசித்து வந்த மாத்தளையை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் பெற்றோர்களான தம்பதிகளே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் கடந்த 22ஆம் திகதி வீட்டில் குழந்தை பிரசவித்துள்ளார். அதனை அடுத்து அவருக்கு அதிக இரத்த போக்கு ஏற்பட்டமையினால் , மூளாய் வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையின் போது குழந்தை பிரசவித்தீர்களா ? என வைத்தியர்கள் கேட்டபோது , ஆரம்பத்தில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளார். இறுதியாக குழந்தை பிரசவித்ததை ஏற்றுக்கொண்டவர் , குழந்தையை தூக்கும் போது , கை தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாகவும் , குழந்தையின் சடலம் வீட்டிலையே உள்ளதாகவும் கூறியுள்ளார்.…
காதலுக்கு கண்ணு மட்டுமா தெரியாது. வயது வித்தியாசமும் பார்க்க தெரியாது என்பது பல நேரங்களில் உண்மை. ‘பக்கத்து வீட்டு பைய தன்னைவிட பெரிய பொண்ணை லவ் பண்றானாமே?’ கண்டிப்பாக நாமும் இது போன்ற செய்திகளை கேள்விப்பட்டிருப்போம். ஆணுக்கு 27 வயது பெண்ணிற்கு 37, இப்படி பத்து வருஷ வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்து கொள்ளலாமா? அதுவும் தன்னை விட 10 வருட மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா? இப்படி பல சந்தேகங்கள் இருக்கும். பெற்றவர்கள் முன்னாடி போய் மூத்த பெண்ணை காதலிக்கிறேன் அதுவும் 10 வருட மூத்த பெண் என சொன்னால், பெற்றவர்களே காதல் என நினைக்க மாட்டார்கள், கா ம வலையில் சிக்கிவிட்டான் என்று தான் முதலில் சிந்திப்பார்கள். ஏனெனில் காதலிக்க எத்தனையோ பெண்கள் சிறுவயதில் இருக்கும்போது, எப்படி பெரிய வயது பெண்ணை காதலிப்பான்? என்று தான் நினைப்பார்கள். ஆனால் பக்குவப்பட்ட ஆண், தனக்கான சரியான துணையை…
நண்பர்கள் வட்டம் அதிகம் உள்ள சூழலில் வளர்ந்தவர்களுக்கு நான் சொல்லப்போவது பெரிய மேட்டரே இல்லை. சிறு வயதில் இருந்தே தனிமையான சூழலில் வளர்ந்தவர்களுக்கு மற்றவர்களை விட கூச்ச உணர்வு ரொம்ப அதிகமாகவே இருக்கும். பெரும்பாலும் ஆண்களுக்கு இடுப்பை தொட்டால், கூச்ச உணர்வு சீக்கிரம் வந்துவிடும். அதிலும் ஒரு சிலருக்கு சொரணையே இருக்காது. என்ன பண்ணாலும், எருமை மாடு மேலே மழை பெய்த மாதிரி நிற்பாங்க. என்னையெல்லாம் தொட்டால், உடனே துள்ளிக்குதித்து விடுவேன். இதில் அதிசயமாக சிலர், இடுப்பை தொட்டால், அடிக்கக் கூட செய்வாங்க. எதற்கும் உஷாரா இருங்க. எனக்கு என்ன பிரச்சனைன்னு தெரியல, யாராவது தோள் மீது கை போட்டாலோ, இல்லை சும்மா சம்பிரதாயத்திற்கு கட்டிப்பிடித்தாலோ கூச்ச உணர்வு உச்சத்திற்கு சென்று விடுகிறது. சில நேரங்களில் ஓங்கி அடித்துவிட வேண்டும் எனக்கூட தோன்றும். மெல்ல மெல்ல என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இதற்கு உளவியல் ரீதியாக காரணம் என்னவென்று பார்த்தால், நான் சிறு…
கனடாவில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.கனடாவின் ஒன்ராறியோ, North Bay அருகே வார விடுமுறையில் நிகழ்ந்த வீதி விபத்தொன்றில் குறித்த யுவதி பலியாகியுள்ளார். சம்பவத்தில் ஸ்காபொரோவை சேர்ந்த 31 வயதான மதுரா அனந்தராம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நெடுந்தெரு 11இல் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. நெடுஞ்சாலையில் படகொன்றை இழுத்துச் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் குறித்த யுவதி பயணித்த வாகனம் அதில் மோதியுள்ளது. இந்த விபத்தில் இரண்டு வாகனங்களில் பயணித்தவர்கள் காயமடைந்தனர். இரண்டாவது வாகனத்தில் பயணித்த தமிழ் யுவதி படுகாயமடைந்ததை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மறுநாள் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இளம் பெண் கடத்தல் விவகாரம் ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் Nantes (Loire-Atlantique) நகரில் புறநகரான Saint-Herblain எனும் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த மே 19 ஆம் திகதி புதன்கிழமை அன்று, 19 வயதுடைய இளம் பெண் ஒருவர் வலுக்கட்டாயமாக மகிழுந்து ஒன்றுக்குள் ஏற்றப்பட்டுள்ளார். பின்னர் இளம் பெண்ணை கடத்திக்கொண்டு மகிழுந்து அங்கிருந்து தப்பிச் சென்றது. இதை நேரில் பார்த்த ஒருவர் மகிழுந்தின் இலக்கத்தகடு விபரங்களுடன் காவல்துறையினரை அழைத்துள்ளார். பின்னர் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், அதே பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரை கைது செய்தனர். தாய் மற்றும் அவரது இரண்டு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் என மொத்தம் ஐவர் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளின் பின்னரே, கடத்தப்பட்ட இளம் பெண்ணும் அதே குடும்பத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. ‘இவர் எங்கள் மகள், வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரை அழைத்து வருவது எங்கள்…
மேஷம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு இருக்கும். நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும்.உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சிறப்பான நாள். ரிஷபம் ரிஷபம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கடமை உணர்வுடன் செயல்படும் நாள். மிதுனம் மிதுனம்: உணர்ச்சிபூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாற்றம் ஏற்படும் நாள். கடகம் கடகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். பழைய கசப்பான சம்பவங்களை எல்லாம் யாரிடமும் விவாதிக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்றுவரவு…
கோவாக்சின் (Covaxin) மற்றும் கோவிஷீல்ட் (Covishield) ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் உள்ளடக்கமும் கொரோனா வைரஸ் தான். பெரும்பாலும் எந்த ஒரு நோயிற்கான தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்படுவது அந்த நோயை உண்டாக்கும் நோய்க் கிருமியே ஆகும். அதாவது அந்த நோய்க்கிருமியின் நோய் உண்டாக்கும் திறனை மட்டுப்படுத்தியோ, அல்லது நீக்கியோ, அந்த நோய்க்கிருமியால் உண்டாகும் நோய்க்கு, அந்த நோய்க்கிருமியே தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படும் நோய்க்கிருமிகள் கொல்லப்பட்டோ அல்லது செயலிழக்க வைக்கப்பட்டோ (Inactivated) தான் பயன்படுத்தப்படுகிறது. எனவே தடுப்பூசியினால் நமக்கு நோய்வாய்ப்பட வாய்ப்பில்லை. மாறாக தடுப்பூசிகள் நமது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அந்த நோய்க்கு எதிராக அதிகரிக்க வைக்கின்றன. முதலில் தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது என்பது புரிந்தால் தான் அது எப்படி நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க செய்கிறது என்று விளங்கும். தடுப்பூசிகள் எவ்வாறு வேலை செய்கின்றன? சுருக்கமாகவும் எளிமையாகவும் விளக்குகிறேன். எந்த ஒரு நோய்க்கிருமி நமது உடலில் நுழைந்தாலும், நமது…